மட்டக்களப்பில் தேர்தலுக்கான ஏற்பாட்டு பணிகள் நிறைவு: மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் இதுவரை எந்த ஒரு தேர்தல் வன்முறையும் பதிவாகவில்லை எனவும், மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாச்சி அதிகாரியுமான ஜேஜே முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் சமகால கால நிலவரங்கள் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் எடுத்துச் சென்ற பின் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிப்பு நடவடிக்கை
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல்களை முன்னெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
எனினும், மாவட்டத்தில் இதுவரையில் 61 தேர்தல் சட்ட விதி மீறல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சனிக்கிழமை (21.09.2024) காலை 7.00மணி தொடக்கம் மாலை 4.00மணி வரையில் தேர்தல் வாக்களிப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வாக்காளர்கள் உரிய நேரத்திற்கு சென்று வாக்களிக்குமாறு வாக்காளர்கள் வேண்டப்படுகின்றார்கள்" என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |