சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளை சேர்ந்த பல பிரதிநிதிகள் இலங்கை விஜயம்!
சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளைச் சேர்ந்த 71 பிரதிநிதிகள் இலங்கை வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 43 பேரும் , பொதுநலவாய நாடுகளை சேர்ந்த 22 பேரும் கூடுதலாக, தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பிலிருந்து (ANFREL) 6 பேரும் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள்
இதேவேளை அண்டை நாடுகளைச் சேர்ந்த 7 பேர் இந்த செயற்பாட்டில் மேலும் இணைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 34 ஐரோப்பிய ஒன்றிய பார்வையாளர்கள் மற்றும் 3 கூடுதல் ANFREL பிரதிநிதிகள் எதிர்வரும் நாட்களில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, 22 தேர்தல் தொகுதிகளிலும் விரிவான கண்காணிப்பை உறுதி செய்வதற்காக பார்வையாளர் குழுக்கள் தங்களது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri