ஜனாதிபதி தேர்தலின் பின் மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு: குகதாசன் உறுதி
மூதூர் - புளியடிச்சோலை கங்குவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் சங்காபிசேகத்திற்கு இன்று (07) சென்ற திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மக்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
குறித்த பிரதேசத்தில் நிலவும் குறைபாடுகள் பிரதேச அபிவிருத்தி தொடர்பிலும் எதிர்காலத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதில் இலங்கை தமிழரசு கட்சியின் உள்ளூராட்சிமன்ற முன்னாள் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வருடாந்த மகோற்சவம்
இக்கிராமத்துக்கு உதவிகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளபோதும் தற்போது தேர்தல் காலம் என்றபடியால் தேர்தலின் பின் உதவிகள் வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் தெரிவித்தார்.
தங்கள் கிராமத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகளை தீர்க்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பேன். தை மாதத்தின் பின் வரவு செலவு திட்டத்தின் பின்னரான காலப் பகுதியில் அபிவிருத்தி வேலைகளை ஆரப்பிக்க முடியும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |