உலக வங்கி இலங்கைக்கு பெருந்தொகை நிதியை வழங்கும்
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர் இலங்கைக்கு பெருந்தொகை நிதியை வழங்க உலக வங்கி எதிர்பார்த்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் அடிப்படை விடயங்கள் தொடர்பாக இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமரின் செயலகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கைக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன.
இதனால், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் திட்டத்தை முன்வைக்க வேண்டும்.
அதன் பின்னர் அனைத்து நாடுகளிடமும் இருந்து நிதியுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.