பாகிஸ்தான் சம்பவத்தின் எதிரொலி! - முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சி
பாகிஸ்தானில் இலங்கை பிரஜை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், குறித்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இலங்கையில் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க முயற்சிக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கை பிரஜை ஒருவர் பாகிஸ்தானில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த சம்பவமானது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்றாகும். இந்நிலையில், சட்டத்தில் எவ்வித் தளர்வுகளும் இன்றி நீதியை நிலைநாட்ட வேண்டிய பொறுப்பு பாகிஸ்தான் அரசுக்கு இருக்கின்றது என அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,