ஐ.நா.ஆணையாளர் மற்றும் கிழக்கு ஆளுனருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பு!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் ( Volker Turk ) மற்றும் அவரது குழுவினர் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்தனர்.
இந்த சந்திப்பு, திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்றுள்ளது.
சந்திப்பு
இலங்கைக்கு நான்கு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள வோல்கர் டர்க், இன்று காலை திருகோணமலையில் சிவில் சமூக மற்றும் மதத் தலைவர்களைச் சந்தித்த பின்னர் ஆளுநர் அலுவலகத்தில் விஜயம் செய்தார்.
மீள்குடியேற்றம், காணாமல் போனோர், மனித உரிமைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள நிலப் பிரச்சினை குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் முடிவுகள்
இலங்கையின் தற்போதைய அரசாங்கம் எடுத்த முடிவுகள் மற்றும் அதன் ஊழல் எதிர்ப்புக் கொள்கைகள் குறித்து மனித பேரவையின் ஆணையாளர் தனது திருப்தியை வெளிப்படுத்தினார்.
வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹோமசந்திர, இலங்கையில் ஐக்கிய நாடு வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் Marc-André Franche மற்றும் குழுவினர், கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் தலங்கம,அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.









புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 20 மணி நேரம் முன்

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam
