மியன்மாரில் ஈஸ்டர் முட்டை போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள் - இப்படிக்கு உலகம்
இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக தினந்தோறும் பல்வேறு வழிமுறைகளில் போராட்டம் நடத்தி வரும் அந்த நாட்டு மக்கள் நேற்று ஈஸ்டர் முட்டைபோராட்டத்தை முன்னெடுத்தனர்.
போராட்டக்காரர்கள் ஈஸ்டர் முட்டைகள் மீது ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான படங்களை வரைந்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். யாங்கூன், மாண்டலே ஆகிய நகரங்களில் போராட்டக்காரர்கள் ஈஸ்டர் முட்டைகளை கையில் ஏந்தி இராணுவ ஆட்சிக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.
இது ஒரு புறமிருக்க பூக்கள் போராட்டம் என்கிற பெயரில் மற்றொரு போராட்டத்தையும் போராட்டக்காரர்கள் முன்னெடுத்தனர்.
இச் செய்திகள் தொடர்பான மேலதிகத் தகவல்களுடனும் இன்னும் பல முக்கிய செய்திகளுடனும் வருகிறது இன்றைய இப்படிக்கு உலகம் தொகுப்பு,