நாட்டில் புதிய அரசியல் கூட்டணி: டலஸ் அழகப்பெரும ஆரூடம்
நாட்டில் எதிர்வரும் காலங்களில் புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்க வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
விரிவான அரசியல் கூட்டணி
ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகிய தலைவர்கள் இன்றிய ஒரு புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளுக்கு இடையில் விரிவான ஓர் அரசியல் கூட்டணியை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்..
மேலும், எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்படும் அரசியல் கூட்டணிகளை தாம் வரவேற்பதாகவும் அவற்றுக்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் தொடர்பில் கதைத்தால் உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும்: தென்னிலங்கையில் எச்சரிக்கை
எனினும் அந்த அரசியல் விரிவான ஓர் அரசியல் கூட்டணியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.