ஜனாதிபதி வெளியிட்ட கருத்து பிழையானது! சவால் விடுக்கும் ஹர்ஷ டி சில்வா
உழைக்கும் போது செலுத்தும் வரி அறவீடு மூலம் 100 பில்லியன் ரூபாவை சேகரிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
உழைக்கும் போது செலுத்தும் வரி மூலம் 100 பில்லியன் ரூபா வருமானம் ஈட்ட முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் கூறியது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறிய இந்த விடயத்தை ஜனாதிபதி ரணில் விளக்க வேண்டுமென சவால் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் ஹர்ஷ டி சில்வாவின் பதில்
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
உழைக்கும் போது செலுத்தும் வரி விதிக்கும் தொகையை இரண்டு இலட்சம் ரூபாவாக உயர்த்தினால் 63 பில்லியன் ரூபா வருமானத்தை இழக்க நேரிடும் என ஜனாதிபதி வெளியிட்ட கருத்தும் பிழையானது எனவும் இதனையும் அவர் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 4 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
