எல்லை மீறும் வைத்தியர்! யாழ். வைத்தியசாலைக்குள் நுழைந்து காணொளி எடுப்பது தீர்வல்ல
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் நடவடிக்கைகள், அண்மைய காலமாக பல சர்ச்சைகளையும் பொதுமக்கள் தரப்பில் விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றன.
இருப்பினும், இவ்வாறான நடவடிக்கைகளில் அவர் ஈடுபடுவதற்கான காரணங்கள் முழுமையாக வெளிவராத நிலையில், தேசிய தலைவரின் பெயரை வைத்து எல்லை மீறும் வகையில் அவர் செயற்படுவதாகவும் ஒரு தரப்பில் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
நாட்டின் பொதுமக்களாக இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றாலும் அனைவருக்கும் சட்ட ஒழுங்குகளும் கட்டுபாடுகளும் இருக்கின்றன. அவற்றை முழுமையாக முதலில் எல்லோரும் கற்றுகொள்ள வேண்டியது அனைவரினதும் அவசியமாகும்.
மேலும், அவற்றை மீறும் வகையில் செயற்படும் போது யாராக இருந்தாலும் நிச்சயமாக அதற்கான விளைவுகளை எதிர்கொள்தற்கான ஒரு சூழ்நிலை உருவாகும் என்பதில் ஐயமில்லை.
எனவே, தமக்கு கிடைக்க பெற்றுள்ள அதிகாரத்தையோ பதவியையோ சட்டத்தினை மீறும் வகையில் பயன்படுத்துவது குற்றம் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.
இந்நிலையில், இவ்வாறான விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது கனேடிய அரசியல் ஆய்வாளரான நேரு குணரட்னத்துடனான ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan