முத்துநகர் விவசாயிகள் விடயத்தில் இரட்டை வேடம் போடும் பிரதியமைச்சர் - எழும் குற்றச்சாட்டு
திருகோணமலை முத்துநகர் விவசாயிகளின் விவசாய காணி அபகரிப்புக்குட்பட்டதையடுத்து இங்குள்ள பிரதியமைச்சர் இரட்டை வேடம் போட்டுள்ளார் என ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளர் மிப்லான் மௌலவி தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முத்து நகர் விவசாயிகளின் காணி மீட்புக்கான போராட்டம் நேற்றுடன் (06) 20ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.
இது தொடர்பில் அவர்களுடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.
கடந்த கால ஆட்சியாளர்கள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம்கள் தற்போது அநீதிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
புல்மோட்டை தொடக்கம் குச்சவெளி கடற்றொழிலாளர்கள் பிரச்சினை, நில உரிமைக்கான போராட்டம் என தற்போது முத்து நகர் வரை செல்கிறது.
கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் பொய் சொல்லி வாக்குகளை பெற்று முஸ்லீம் சமூகத்தின் வாக்குகளை ஏர்ஜன்ட் மூலமாக கொழும்பில் விற்றார்கள்.
முஸ்லீம் தலைமைகளை புறந்தள்ளி விட்டே தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை முஸ்லீம் சமூகம் ஆதரவளித்தது பொதுத் தேர்தலிலும் ஆதரவளித்தார்கள்.
இதற்காக ஜனாதிபதி முத்துநகர் மக்களுக்கான தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். ஊழல்,இனவாதம்,போதைப் பொருள் தடுப்பு போன்ற விடயங்களுக்கு எதிராக உள்ள அநுர அரசாங்கம் இது போன்று முத்து நகர் விவசாயிகளுக்காகவும் ஆதரவாக செயற்பட வேண்டும்.
இது போன்று கிழக்கு மாகாண மக்கள் சிவில் சமூகம்,உலமாக்கள் ஒன்றினைந்து இம் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.
வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்
எதிர்வரும் ஜூம் ஆ தொழுகையின் பின் அனைத்து பள்ளிகளும் இணைந்து உலமா சபை இணைந்து இம் மக்களின் அநீதிக்காக குரல் கொடுங்கள். இவர்களுக்காக கொழும்பில் சுமார் 10ஆயிரம் கையொப்பங்களை சேகரித்து ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளோம் என்றார்.
இது தொடர்பில் முத்து நகர் ஒன்றினைந்த விவசாய சம்மேள செயலாளர் சஹீலா சபூர்தீன் தெரிவிக்கையில், இருபதாவது நாளாக சத்தியாக் கிரக போராட்டத்தில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் முத்து நகர் விவசாய பூமியை மீட்டுதரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
பிரதமர் கூறிய பத்து நாட்கள் தீர்வு இன்னும் முடிவாக வரவில்லை. இம்மாதம் 20ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கியுள்ளார்கள்.
சாதகமான தீர்வை தாருங்கள் இம் முறை நெற் செய்கை விதைக்க வேண்டியுள்ள நிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
இதன் மூலம் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம் எனவே எங்கள் விவசாய பூமியை மீள பெற்றுத் தாருங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
