ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வடையும் – திஸ்ஸ அத்தநாயக்க
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரியளவில் அதிகரிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கடன் செலுத்துகைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு, இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஹங்வெல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இறக்குமதிகளை வரையறுத்து, கடன் செலுத்துகைகளை நிறுத்தியதன் காரணமாக நாட்டில் செயற்கையான பொருளாதார ஸ்திரத்தன்மை நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |