வைத்தியர்களின் பணி புறக்கணிப்பு: சிகிச்சை இன்றி தவிக்கும் சிறுவர்கள்
கொழும்பு - லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புக் காரணமாக சிறார்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையின் ஒரு பெண் வைத்தியர் உட்பட மூன்று வைத்தியர்கள் பத்து நாட்களாக கடமையை புறக்கணித்ததன் காரணமாகவே இந்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிகிச்சைகள் பாதிப்பு
இதனால், வைத்தியசாலையின் 8ம் வார்டில் உள்ள சிறார்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வார்டுக்கு குழந்தைகளை உட்சேர்ப்பதில் தடைகள் நிலவுவதாகவும், அதனால் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |