இலங்கையிலிருந்து வெளியேறும் வைத்தியர்கள்: பெரும் சிக்கலில் மருத்துவதுறை
இலங்கையில் இருந்து மருத்துவ நிபுணர்களின் இடம்பெயர்வு அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நிபுணர்களுக்கு வழங்கப்படும் குறைந்த சம்பளத்தினால், நிலைமை தங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது என்பதை சுகாதார அதிகாரிகள் தற்போது ஒப்புக்கொண்டுள்ளனர்.
வைத்தியர்கள், குறிப்பாக நிபுணர்கள் வெளியேறுவதைச் சமாளிப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் கடினமாகிவிட்டன என்றும் அதிகாரிகள் குறிப்பிடுள்ளனர்.
கடந்த ஆண்டு முதல் மொத்தம் 274 நிபுணர்கள் இடம்பெயர்ந்துள்ளனர், மேலும் 160 பேர் அமைச்சகத்தின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அடுத்த ஆண்டு ஓய்வு
785 நிபுணர்கள் பயிற்சிக்காக வெளிநாடு செல்ல உள்ளனர். அதே நேரத்தில் சுமார் 600 வைத்தியர்கள் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக குணரத்ன, அதிகரித்து வரும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் குறைந்த சம்பளமும் குறிப்பிடத்தக்க பங்கை வகிப்பதாக சுட்டிக்காட்டினார்.
இதற்கு நேர்மாறாக, வெளிநாடுகள் அதிக சம்பளம் மற்றும் சிறந்த தங்குமிட வசதிகளை வழங்குவதால், இலங்கை மருத்துவர்களை அது மிகவும் கவர்ந்திழுக்கிறது.
மருத்துவ நிபுணர்களின் சம்பளம் குறைவு
இதற்கிடையில், இலங்கையின் மருத்துவ நிபுணர்கள், இங்கிலாந்தில் 3.37 மில்லியன் ரூபாயும், அவுஸ்திரேலியாவில் 2.71 மில்லியன் ரூபாயும், ஓமானில் 1.6 மில்லியன் ரூபாயும் ஐக்கிய அரபு ராட்சியத்தில் 3.36 மில்லியன் ரூபாயும் சம்பளம் பெறுவதாக தகவலறிந்த தரப்புகள் தெரிவிக்கின்றன.
இதற்கு நேர்மாறாக, இலங்கையில் மருத்துவ நிபுணர்களின் சம்பளம் மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு மூத்த நிபுணருக்கு அனைத்து விலக்குகளுக்கும் பிறகு 201,000 மட்டுமே மாத வருமானம் கிடைக்கும், அதே சமயம் ஒரு கடைநிலை நிபுணருக்கு வெறும் 128,500 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்த பரந்த சம்பள ஏற்றத்தாழ்வு, வேறு இடங்களில் சிறந்த நிதி வாய்ப்புகளைத்
தேடும் மருத்துவ நிபுணர்களின் வெளியேற்றத்தைத் தூண்டியுள்ளது என்றும்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கண்ணாடியை திறந்ததும் அசுர வேகத்தில் தாக்கிய Eastern Indigo Snake... பதறவைக்கும் வைரல் காணொளி! Manithan

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
