மர்மமாக உயிரிழக்கும் மீன்கள்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு (video)
கொத்மலை ஓயா பிரதேசத்தில் வசிக்கும் மக்களுக்கு, ஆற்றுப் பகுதிகளில் இறந்து கரையொதுங்கும் மீன்களை உணவுக்காக பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று (16) முதல் இந்தப் பகுதிகளில் திடீரென மீன்கள் இறந்து கிடப்பதாக நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அம்பேவல தொடக்கம் மெரயா, அல்ஜின் அக்கரகந்த வரையான சுமார் 12 கிலோ மீட்டர் வரை மீன்கள் மர்மமான முறையில் இறந்து காணப்படுகின்றன.
இறந்த மீன்களை உணவுக்காக பயன்படுத்த வேண்டாம்!
இந்நிலையில் தோட்டத் தொழிலாளர்களும் ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் பிரதேசவாசிகளும் இறந்த மீன்களை எடுத்துச் செல்வதால் இறந்த மீன்களை உணவுக்காக பயன்படுத்த வேண்டாம் என நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிஷங்க விஜேவர்தன மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


