மூட நம்பிக்கைகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
பூஸ்டர் டோஸ் கோவிட் தடுப்பூசியை விரைவில் பெற்றுக்கொள்ளுமாறு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல வைத்தியர் சன்ன டி சில்வா பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்காலத்தில், ஒமிக்ரோன் பிறழ்வு நாட்டின் முன்னணி கோவிட் வைரஸாக மாறக்கூடும். எனவே மூட நம்பிக்கைகளை நம்பி ஏமாந்து விடாதீர்கள் எனவும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.
இந்த ஒமிக்ரோன் மாறுபாடு இலங்கை முழுவதும் வேகமாக பரவுவதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் அதிகளவில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.