க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக நடவடிக்கை
க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றும் மாணவ மாணவியருக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சைகள் இன்றைய தினம் கடுமையான சுகாதார விதிமுறைகளுக்கு அமைய ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் அனுமதிக்கப் போவதில்லை என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் சாதாரணதரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறிப்பாக பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் ஒலி மாசுறும் வகையில் நடந்து கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸாரை் அறிவித்துள்ளனர்.
பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றை மிகுந்த சத்தத்துடன் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri