க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக நடவடிக்கை
க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றும் மாணவ மாணவியருக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சைகள் இன்றைய தினம் கடுமையான சுகாதார விதிமுறைகளுக்கு அமைய ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் அனுமதிக்கப் போவதில்லை என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் சாதாரணதரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறிப்பாக பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் ஒலி மாசுறும் வகையில் நடந்து கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸாரை் அறிவித்துள்ளனர்.
பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றை மிகுந்த சத்தத்துடன் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam