க.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக நடவடிக்கை
க.பொ.த சாதாரணதர பரீட்சையில் தோற்றும் மாணவ மாணவியருக்கு இடையூறு விளைவிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சைகள் இன்றைய தினம் கடுமையான சுகாதார விதிமுறைகளுக்கு அமைய ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டையும் அனுமதிக்கப் போவதில்லை என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் சாதாரணதரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறிப்பாக பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் ஒலி மாசுறும் வகையில் நடந்து கொள்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸாரை் அறிவித்துள்ளனர்.
பரீட்சை நிலையங்களுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றை மிகுந்த சத்தத்துடன் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan