திருகோணமலையில் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் உபகரணங்கள் கையளிப்பு
திருகோணமலை, மூதூர் பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட, மூதூர், தோப்பூர் பொது அமைப்புகளுக்கான உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது பதில் பிரதேச செயலாளர் எம்.எச். முகம்மது கனி தலைமையில் மூதூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
பலர் பங்கேற்பு
மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும், மூதூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து உபகரணங்கள் பள்ளிவாசல்கள், பாடசாலைகள், முன்பள்ளி அபிவிருத்தி நிலையங்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக நிறுவனங்களுக்கும் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |