எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் : நீதி அமைச்சருக்கும் நாடாளுமன்றக் குழுவிற்கும் இடையே முரண்பாடு
"எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம்" தொடர்பான வழக்கு தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கும், நாடாளுமன்றத்தின் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும்
நிலையான அபிவிருத்திக்கான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் அஜித்
மன்னப்பெருமவிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் 4 அன்று, சட்டமா அதிபர் திணைக்களம் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தியது.
உத்தரவு
இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மன்னப்பெரும, ஏப்ரல் 25 ஆம் திகதியன்று இழப்பீட்டு செயல்முறை தொடர்பில் மற்றொரு குழு கூட்டத்திற்கு அழைக்குமாறு அமைச்சரவை செயலாளர் மற்றும் சட்டமா அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எனினும், அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அமைச்சரவை செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகிய இருவரையும் குறித்த குழுவுக்கு செல்லவேண்டாம் என்றும் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிப்பதைத் தவிர்க்குமாறும் அறிவிக்குமாறு தனது அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற வழக்கு
நீதிமன்ற வழக்கு தொடர்பாக அதிகாரிகளை கேள்வி கேட்க துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு உரிமை இல்லை.
நீதிமன்ற வழக்கு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவது கூட தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கோரிக்கையானது நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளை மீறும் செயலாகும் எனவும் அமைச்சர் விஜயதாக ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. இந்த வழக்கு எங்கு தாக்கல் செய்வது
என்பதை அமைச்சரவை ஏற்கனவே முடிவு செய்துள்ளது என்றும் அமைச்சர்
குறிப்பிட்டுள்ளார்.

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
