சஜித் பிரேமதாசவுக்கு எதிராக டயானா கமகே தாக்கல் செய்த மனு நிராகரிப்பு
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் முறையே ஐக்கிய மக்கள் சக்தியின்; தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளில் கடமையாற்றுவதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
எனினும் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகிய இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இல்லை என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அத்துடன் கட்சியின் பதவியில் இருந்து விலகியதை டயானா கமகே மறைத்துவிட்டதாகவும் சஜித் பிரேமதாச தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri
