நசீர் அஹமட் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் (06.10.2023) காலை உயர்நீதிமன்ற நீதிபதிகளான ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கட்சியிலிருந்து நீக்கும் தீர்மானம்
இதன்போது சுற்றாடல் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நசீர் அஹமட்டை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் தெரிவித்திருந்தார்.
கட்சியின் தீர்மானத்தினை மீறி 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் நசீர் அஹமட் நீக்கப்பட்டார்.
இதற்கு எதிராக நசீர் அஹமட் உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்றினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த தீர்ப்பினை அடுத்து அமைச்சர் நசீர் அஹமட், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்.. எந்தெந்த தொடர், முழு விவரம் Cineulagam
