யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான தொடருந்து சேவைகள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்

Colombo Jaffna Vavuniya Srilanka Bus Train
By Kajinthan Jun 20, 2026 01:35 PM GMT
Report

யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான தொடருந்து சேவைகளை மீள அதிகரித்தல், நேர அட்டவணைகளை மீளமைத்தல் மற்றும் உட்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நடைப்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலானது வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (20.06.2026) காலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் - 9A சித்திகளை பெற்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை

சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் - 9A சித்திகளை பெற்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை

தொடருந்து சேவைகளின் அதிகரிப்பு

வடக்கு மாகாணத்துக்கு பெருமளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாலும், பாதுகாப்பான மற்றும் நேரத்தை மீதப்படுத்தும் பயணமாக தொடருந்து போக்குவரத்து அமைவதாலும், கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான தொடருந்து சேவைகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான தொடருந்து சேவைகள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் | Discussion Train Services Between Jaffna Colombo

அத்துடன், பயணிகளின் வசதிக்கேற்ப தற்போதைய நேர அட்டவணைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த தொடருந்து பொது முகாமையாளர், தொடருந்து இயந்திரங்களுக்கான பற்றாக்குறையே சேவைகளை முழுமையாக மீள ஆரம்பிப்பதில் பல தடைகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

எனினும், புதிய இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தற்காலிகமாகச் சேவைகளை அதிகரிப்பது மற்றும் பகல் நேர தொடருந்து சேவைகளை ஒழுங்கமைப்பது தொடர்பில் ஆராய்ந்து துரித நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன், 'யாழ். ராணி' தொடருந்து சேவையில் அவசியமான மாற்றங்களை மேற்கொண்டு, அதனை வவுனியா வரை நீடிப்பது குறித்தும் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சரக்கு தொடருந்து சேவை

தற்போது அநுராதபுரம் வரை மாத்திரமே முன்னெடுக்கப்படும் சரக்கு தொடருந்து சேவையை, வடக்கு மாகாணத்தின் காங்கேசன்துறை வரை விரிவுபடுத்துமாறு ஆளுநர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட  தொடருந்து பொது முகாமையாளர், அதற்கான துரித நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான தொடருந்து சேவைகள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் | Discussion Train Services Between Jaffna Colombo

ஒருங்கிணைந்த பன்முகப் போக்குவரத்து மையங்கள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் வழிகாட்டலில், நாடளாவிய ரீதியில் பன்முகப் போக்குவரத்து மையங்களை அமைக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் இவ்வாறான பிரதான நிலையங்களை, வடக்கு மாகாணத்தில் முதற்கட்டமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இளம் பெண் மர்மமான முறையில் மரணம் - கணவனின் தொடர்ச்சியான சித்திரவதை

இளம் பெண் மர்மமான முறையில் மரணம் - கணவனின் தொடர்ச்சியான சித்திரவதை

பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் 

தொடருந்து திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் பற்றைக்காடுகளாகக் காணப்படுவதுடன், சில பகுதிகளில் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

பயன்படுத்தப்படாத அந்தக் காணிகளைத் துப்புரவு செய்து, மக்களுக்கே வழங்கும் சாத்தியக்கூறுகளைப் பரிசீலிக்குமாறு ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகரிலுள்ள அன்னசத்திர வீதியை  தொடருந்து திணைக்களம் மூடியுள்ளமைக்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள கடும் அதிருப்தியை ஆளுநரும், அமைச்சர் இ.சந்திரசேகரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான தொடருந்து சேவைகள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் | Discussion Train Services Between Jaffna Colombo

இதற்குப் பதிலளித்த  தொடருந்து அதிகாரிகள்,  தொடருந்து பாதைகள் தொடர்பான 'மாஸ்டர் பிளான்' அடுத்த ஓராண்டுக்குள் நிறைவடையும் எனவும், அதன் பின்னரே காணிகள் மற்றும் வீதிகள் விடுவிப்புத் தொடர்பில் இறுதி முடிவுகள் எட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண  தொடருந்து பாதைகள் அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், குறுக்கறுக்கும் வீதிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பிரதான வீதிகளுடன் இணைக்கும் சமாந்தர வீதிகளை அமைப்பதே விபத்துகளைத் தவிர்க்கும் சிறந்த வழிமுறை என  தொடருந்து பணிப்பாளர் சுட்டிக்காட்டியள்ளார்.

மாவட்ட ரீதியான முக்கிய கோரிக்கைகள்

'டித்வா' பேரிடரால் சேதமடைந்து இடைநிறுத்தப்பட்டுள்ள  தொடருந்து சேவையை, மடுத் திருவிழாவுக்கு முன்னதாக மீள ஆரம்பிப்பதற்குச் சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனப் பொது முகாமையாளர் உறுதியளித்துள்ளார்.

மூடப்பட்ட ரயில் கடவைகளால் மக்கள் பல கிலோமீற்றர்கள் சுற்றிச் செல்லும் நிலை காணப்படுவதால், இது குறித்து கள ஆய்வு செய்து சில கடவைகளை விடுவிக்கவும், ஏனையவற்றிற்கு மாற்று வீதிகளை அமைக்கவும்  தொடருந்து திணைக்களம் சம்மதம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான தொடருந்து சேவைகள் தொடர்பில் முக்கிய கலந்துரையாடல் | Discussion Train Services Between Jaffna Colombo

மாவட்டத்தின் ஒரேயொரு  தொடருந்து நிலையமான மாங்குளத்தில் அனைத்து  தொடருந்துகளும் நிற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுடன், அங்கு பன்முகப் போக்குவரத்து மையமொன்றை அமைப்பதன் ஊடாக தற்போதைய காணி மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற தொடருந்து கடவைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களால் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகள் தொடர்பிலும் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், இலங்கை  தொடருந்து திணைக்களப் பணிப்பாளர், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டச் செயலாளர்கள், யாழ்ப்பாணம் உதவி மாவட்டச் செயலாளர், தூய்மை இலங்கைச் செயலணியின் இயக்குநர், வவுனியா மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், தொழிற்துறைத் திணைக்களப் பணிப்பாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதி, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுநரின் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

வடக்கு - கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகள் போராளிகள் கையில்..! சிறீதரன் எம்.பி அறைகூவல்

வடக்கு - கிழக்கு மாகாண சபையின் பொறுப்புகள் போராளிகள் கையில்..! சிறீதரன் எம்.பி அறைகூவல்

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US