திருகோணமலையில் சமூக சேவை பணிக்குழுவை நிறுவுதல் தொடர்பில் கலந்துரையாடல்
திருகோணமலை(Trincomalee) மாவட்ட செயலகம் மற்றும் CERI நிறுவனமும் இணைந்து மாற்று பராமரிப்பு பணிக்குழு மற்றும் சிறுவர்களை பாதுகாப்பாக வளர்ப்பதற்கு ஆதரவாக ஒரு சமூக சேவை பணிக்குழுவை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (04) மாவட்ட செயலக உப ஒன்று கூடல் மண்டபத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
திறந்த விவாதம்
CERI நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் வி.தர்ஷன் அவர்களினால் இக்கலந்துரையாடல் பற்றிய அறிமுகம் மற்றும் நோக்கம் என்பன எடுத்து கூறப்பட்டது.
ஜகுழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள், குழந்தைகளை வலுப்படுத்துவதற்கான தேவைகள், தரவு அடிப்படை மேம்பாடு, முன்னோக்கி செல்லும் வழி பற்றிய திறந்த விவாதம் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தின் ஆணையாளர் ஆர். ரிஸ்வாணி, துறை சார்ந்த அதிகாரிகள், துறைசார் சார்ந்த உத்தியோகத்தர்கள், CERI நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
