சீனாவிலிருந்து உரத்தை மீண்டும் கொண்டு வருவது தொடர்பிலான கலந்துரையாடல்
இலங்கைக்குச் சீனாவிலிருந்து மீண்டும் உரத்தைக் கொண்டு வருவது தொடர்பான கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக கொமர்ஷல் உர நிறுவனம் அறிவித்துள்ளது.
குறித்த கலந்துரையாடல் உரச் செயலகத்தின் அதிகாரிகளுடன் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கு அமையக் குறித்த உரம் நாட்டுக்குக் கொண்டு வரப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் 8,000 மெற்றிக் டன் சீன உரத்தை ஏற்றிய கப்பலை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.