அலி சப்ரி ரஹீம் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை : சபாநாயகருக்கு கடிதம்
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்திய புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
அத்துடன் அலி சப்ரி ரஹீம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கோரிக்கை விடுத்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஒழுக்க விதிகளின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டுமென 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் சபாநாயகரிடம் கடிதம் ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.
சட்டவிரோத செயற்பாடு
இதேவேளை அலி சப்ரி ரஹீம் கடந்த மாதம் 25 ஆம் திகதி இரவு 8.50 மணியளவில் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் புறப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஏழரை கோடி பெறுமதியான தங்கம் மற்றும் கைத்தொலைபேசியுடன் சட்டவிரோதமான முறையில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்தபோது கடந்த மாதம் 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு 75 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
