கடுமையாக சாடிய ஜனாதிபதி! அனுரவின் திடீர் முடிவு
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலக தீர்மானித்துள்ளார்.
இதன்படி, அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க, பதவி விலகல் கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளதாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கடுமையாக சாடிய ஜனாதிபதி
தொல்பொருள் திணைக்கள காணி ஒதுக்கீடு பிரச்சினை தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,“நீங்கள் எனக்கு வரலாறு கற்பிக்க முயற்சிக்கின்றீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க வேண்டுமா ? என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரியை கேட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி விலக தீர்மானித்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |