முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கைநெறி யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைப்பு
2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கான முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கை நெறிக்கான தொடக்கவிழா நேற்றையதினம் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றிருந்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் கல்வியியல் துறை , கலைப்பீடத்துடன் இணைந்து நடாத்தும் முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி 2024 - 2025 அங்குரார்ப்பணமும் திசைமுகப்படுத்தல் நிகழ்வும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்றையதினம் (15.09.2024) பிற்பகல் 1 மணியளவில் நடைபெற்றது.
கலந்து கொண்டோர்
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய குறித்த நிகழ்வின் அமர்வில் வரவேற்புரை, துறைத்தலைவர் உரை, பணிப்பாளர் உரை, கலைப்பீடாதிபதி உரை, முன் கல்வி பணிப்பாளர் உரை, கல்வி அபிவிருத்திக்குழுமம், காப்பாளர் உரையை தொடர்ந்து கல்வி அபிவிருத்தி குழுமத்தின் நிதி அனுசரணையில் புலமைபரிசில் வழங்கும் நிகழ்வும், திசைமுகப்படுத்தல் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |