நாட்டில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கையில் நாளாந்தம் கண்டறியப்படும் 105 புற்றுநோயாளிகளில் 46 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் (NCCU) பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தி மாநாட்டில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
50 சதவீதம் பேர் இறப்பு
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,“2020 ஆம் ஆண்டில் மொத்தம் 38,229 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் 16,691 பேர் இந்த நோயால் இறந்துள்ளனர்.
பெண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதுடன் ஆண்களில் இறப்பு விகிதம் அதிகமாக காணப்படுகின்றது.
2020 ஆம் ஆண்டில் மொத்தம் 20,395 பெண்களும் 17,834 ஆண்களும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புற்றுநோயால் கண்டறியப்பட்ட நோயாளிகளில் 50 சதவீதம் பேர் இறக்கின்றனர்.
புற்றுநோயாளிகளுக்கான மருந்து தட்டுப்பாடு காணப்படுகின்றது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஊடாக மருந்துகளை கொள்வனவு செய்யும் பொறிமுறையொன்று நடைமுறையில் உள்ளது.
அந்த செயல்முறையும் நடைமுறைக்கு வருவதற்கு சுமார் ஆறு மாதங்கள் ஆகும்.”என தெரிவித்துள்ளார்.
கதிரியக்க நிபுணர்கள்
இதேவேளை வெளிநாட்டுப் பயிற்சிக்காக இடம்பெயர்ந்து வரும் கதிரியக்க நிபுணர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் இலங்கைக்குத் திரும்பி பயிற்சி பெறாமல் அந்த நாடுகளிலேயே தங்கியிருக்கும் போக்கு காணப்படுவதாக தேசிய புற்றுநோய் நிறுவகத்தின் புற்றுநோயியல் நிபுணரும் புற்றுநோய் நிபுணருமான வைத்தியர் பிரசாத் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.இந்த விடயம் குறித்து விரைவில் கவனிக்கப்பட வேண்டும்.
மேலும் அவர்கள் திரும்பி வந்து இங்கு பயிற்சி பெற ஊக்குவிக்கும் திட்டத்தை அரசாங்கம் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
