இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம்பெயர் தமிழர்களின் திடீர் முடிவு
இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கூறுகையில், இலங்கையிலிருந்து மிக பெரிய எண்ணிக்கையிலான தொழில்வாண்மையாளர்களும் கல்வி கற்றவர்களும் வெளியேறியுள்ளனர்.இப்போதும் வெளியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு வேறு நாடுகளுக்கு சென்றவர்கள் தமது குடும்பங்களுக்கு பணம் அனுப்பும் போது இலங்கையில் வெளிநாட்டு பணங்களின் புழக்கம் அதிகரிக்கும் நிலை தொடர்வதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.
இலங்கையிலிருந்து மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் பரவாயில்லை வெளிநாட்டு பணம் அனுப்பினால் போதும் என்ற மனப்பாங்கில் அரசாங்கம் உள்ளதாக கூறினார்.
மேலும் இலங்கையை பொறுத்தமட்டில் உல்லாச பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam