பேருந்துகள் மற்றும் சாப்பாட்டுக்கடைகளில் ஏன் இப்படி நடக்கிறது..! புலம்பெயர் தொழிலதிபரின் ஆதங்கம் (Video)
அடுத்த 20 வருடங்களுக்கு முறையாக திட்டமிட்டால் அடுத்த தலைமுறையை மாற்றலாம் என புலம்பெயர் தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.
ஐ.பி.சியின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இந்த தலைமுறையை திருத்தவே முடியாது. பேருந்துகளில் பயணிக்கும் போது வெற்றிலை எச்சிலை பேருந்துகளில் இருந்தே உமிழ்கிறார்கள். அது பின்னால் வரும் வாகனங்களில் படும். அல்லது போத்தல்களை எறிவார்கள்.
சாப்பாட்டு கடைக்கு சென்றால் ஒவ்வொன்றாக தொட்டு பார்த்து ஒன்றை மட்டும் எடுப்பது. அது மற்றுமொருவருக்கு வழங்கப்படும். இதை மாற்றுவது இலகுவான காரியம் அல்ல. ஆனால் அடுத்த 20 வருடங்களுக்கு முறையாக திட்டமிட்டால் அடுத்த தலைமுறையை மாற்றலாம். பாலர் வகுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
