அபிவிருத்தி வேலைத் திட்டங்களை துரிதப்படுத்துக..! வடக்கு ஆளுநர் பணிப்புரை
2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத் தேவைப்படும் தொழில்நுட்ப ஆளணியின் ஒத்துழைப்புகளைப் பெற்றுத் தருவதற்கு உரிய நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான செயற்றிட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் செயலகத்தில் நேற்று(04.03.2026) காலை ஆளுநர் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த ஆண்டுக்குரிய முதலாவது அமைச்சுசார் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமாக இது அமைந்துள்ளது.
வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்
மாகாண சபையின் வழமையான நிதி, 'டித்வா' பேரிடர் பாதிப்புக்கான நிதி, மத்திய நிரல் அமைச்சுக்களின் நிதி, மாவட்டச் செயலகங்களின் நிதி, உள்ளூராட்சி மன்றங்களின் சபை நிதி மற்றும் முத்திரைத் தீர்வை நிதி எனப் பல்வேறு நிதி மூலங்களினூடான வேலைத் திட்டங்களை நாம் இந்த ஆண்டு முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும்.

குடிபுகுச் சான்றிதழ் இன்றி இயங்கும் வர்த்தக நிறுவனங்களால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஏற்படும் வருமான இழப்புகள் தொடர்பில் ஆளுநர் விசேட கவனம் செலுத்தினார்.
மேலும், கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தை இந்த ஆண்டும் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துமாறும், லஞ்சீட் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாகச் செயற்படுகின்றமைக்குப் பாராட்டுத் தெரிவித்த அவர், அதனைத் தொடர்ந்தும் இறுக்கமாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.
நகரப் பகுதிகளில் இடம்பெறும் ஒலிபெருக்கி விளம்பரச் சேவைகள் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைச் சகல உள்ளூராட்சி மன்றங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும், மரம் நடுகைத் திட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam