இலங்கையில் மீண்டும் அச்சுறுத்தலாக மாறிவரும் கோவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு!
நாட்டில் கோவிட் தொற்று உறுதியான மேலும் 912 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,904 ஆக உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 335,851 ஆக அதிகரித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டில் மேலும் 1,992 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கோவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 334,939 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கோவிட் தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 298,162 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி, நாட்டின் மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 5340 ஆக உயர்வடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




