பிரித்தானியாவில் கடைசி நிமிடத்தில் திடீரென இரத்து செய்யப்பட்ட விமானம்
பிரித்தானியாவிலிருந்து ஈராக்குக்கு நாடு கடத்தப்பட இருந்த குர்திஷ் புகலிடக்கோரிக்கையாளர்களை சுமந்துகொண்டு புறப்பட இருந்த விமானம் ஒன்று, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் நாடாளுமன்றத்திலுள்ள குர்திஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடுகடத்தல் விவகாரம் தொடர்பாக ஈராக் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, அந்த விமானம் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் இரத்து செய்தமைக்கான காரணம்
குர்திஷ் நாடாளுமன்ற உறுப்பினரான Arian Taugozi என்பவர், தான் பத்துக்கும் மேற்பட்ட குர்திஷ் புகலிடக்கோரிக்கையாளர்களிடம் பேசியதாகவும், தங்களுடைய விமானத்தை இரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய உள்துறைச் செயலக அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்ததாகவும், அவர்கள் பிரித்தானிய காவல் மையம் ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் விமானம் இரத்து செய்யப்பட்டாலும், பிரித்தானிய உள்துறைச் செயலகத்தின் முடிவு எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்த விடயம் பிரபல பிரித்தானிய ஊடகங்கள் எதிலும் வெளியாகவில்லை. எனவே, இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam