பிரித்தானியாவில் கடைசி நிமிடத்தில் திடீரென இரத்து செய்யப்பட்ட விமானம்
பிரித்தானியாவிலிருந்து ஈராக்குக்கு நாடு கடத்தப்பட இருந்த குர்திஷ் புகலிடக்கோரிக்கையாளர்களை சுமந்துகொண்டு புறப்பட இருந்த விமானம் ஒன்று, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக் நாடாளுமன்றத்திலுள்ள குர்திஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடுகடத்தல் விவகாரம் தொடர்பாக ஈராக் அரசுக்கு அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, அந்த விமானம் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் இரத்து செய்தமைக்கான காரணம்
குர்திஷ் நாடாளுமன்ற உறுப்பினரான Arian Taugozi என்பவர், தான் பத்துக்கும் மேற்பட்ட குர்திஷ் புகலிடக்கோரிக்கையாளர்களிடம் பேசியதாகவும், தங்களுடைய விமானத்தை இரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக பிரித்தானிய உள்துறைச் செயலக அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்ததாகவும், அவர்கள் பிரித்தானிய காவல் மையம் ஒன்றிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் விமானம் இரத்து செய்யப்பட்டாலும், பிரித்தானிய உள்துறைச் செயலகத்தின் முடிவு எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இந்த விடயம் பிரபல பிரித்தானிய ஊடகங்கள் எதிலும் வெளியாகவில்லை. எனவே, இந்த செய்தி எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியடைந்த தக் லைஃப்.. இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
