குழந்தைகளை தத்தெடுக்க காத்திருக்கும் 5000 பேர்
குழந்தைகளை தத்தெடுப்பதற்காக 5 ஆயிரம் பேர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
5 வருடங்களுக்கு மேல் இவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக திணைக்களத்தின் மூத்த அதிகாரி நிர்மலி பெரேரா தெரிவித்துள்ளார்.
மாகாண மட்டத்தில் இந்த விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. மேல் மாகாணத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை குழந்தைகளை தத்தெடுப்பதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
பிள்ளைகளை வளர்க்க முடியாதவர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

எனினும் கிடைத்துள்ள விண்ணப்பங்களுக்கு அமைய குழந்தைகளை வழங்க முடியாது. தத்தெடுப்பு கட்டளைச் சட்டத்தின்படி குழந்தைகளை தத்தெடுக்க முடியும்.
திருமணமாகாத பெண்ணுக்கு குழந்தை பிறந்தால் அல்லது குழந்தைகள் பிறந்த பின்னர் பிள்ளைகள் வளர்க்க முடியாத பெற்றோர் குழந்தைகளை சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்க முடியும்.
இதனால், குழந்தைகள் பிறந்த பின்னர், அவற்றை வளர்க்க முடியாதவர்கள், பிள்ளைகளை கொன்று விட வேண்டாம் எனவும் நிர்மலி பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri