மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் 12ம் திகதி திறந்திருக்குமென அறிவிப்பு
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் எதிர்வரும் 12ம் திகதி திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ம் திகதியையும் அரசாங்க நிறுவனங்களுக்கு பொதுவிடுமுறையாக பிரகடனம் செய்வதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் எதிர்வரும் 12ம் திகதி மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் வழமை போன்று பணிகளை முன்னெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க விடுமுறை என்ற போதிலும் ஏற்கனவே நேரத்தை ஒதுக்கிக் கொண்ட சேவை பெறுனர்களின் நலனை கருத்திற் கொண்டு அலுவலகம் திறந்திருக்கும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், யாழ்ப்பாணம், குருணாகல், அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பகுதிகளில் காணப்படும் கிளை அலுவலகங்களும் ஏற்கனவே நேரத்தை ஒதுக்கிக் கொண்ட சேவை பெறுனர்களுக்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.