வட மாகாணத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு
வடமாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த எட்டு மாதங்களில் மட்டும் வடமாகாணத்தில் 2772 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வருடம்
அதிகளவிலான மழைவீழ்ச்சி ஏற்பட்டதும் டெங்கு நோய் பரவுவதற்கு பிரதான காரணமாக
அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.