அரச நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்
டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகம் உள்ள இடமாக அரச நிறுவனங்களின் வளாகங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் கே.டி.என் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஒவ்வொரு அரச நிறுவனங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என குறித்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு ரஞ்சித் அசோக உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி குழுவின் செயல்பாடுகள் தொடர்பான அறிக்கையை, வட்டார சுகாதார மருத்துவ அதிகாரிக்கு மாதந்தோறும் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெங்கு ஒழிப்பு செயற்பாடு

டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகம் உள்ள இடமாக அரச நிறுவன வளாகங்களை அடையாளப்படுத்தி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 'அரச நிறுவனங்களின் டெங்கு தடுப்பு தினமாக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செயலாளர் குறிப்பிட்டார்.
அதன்படி, அன்றைய தினம், அனைத்து ஊழியர்களின் பங்களிப்புடன், நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து, காலை, 9.00 மணி முதல், 10.00 மணி வரை, ஒரு மணி நேரம் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan