தமிழர் தாயக எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரியுங்கள்! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை..
தமிழர் தாயக எங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளால் அலங்கரியுங்கள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளருமான ச.கீதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈழ விடுதலைப் போராட்டத்துக்காக தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் வகையிலும் மாவீரர்களுக்கு அதி உச்ச மரியாதையை வழங்கும் வகையிலும் தமிழர் தேசமெங்கும் மஞ்சள் சிவப்பு கொடிகளை அலங்கரிப்பதுடன் மாவீரர்களுக்கான நினைவு மண்டபங்களை அமைக்குமாறும் தெரிவித்துள்ளார்.
மாவீரர்களுக்கு உச்ச மரியாதை
ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக வித்தாகிய மாவீரர்கள் இன்றும் எமது நெஞ்சமெல்லாம் நிறைந்துள்ளார்கள் எமது மாவீரர்களுடைய தியாகம் உலக வரலாற்றிலேயே மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக பார்க்க முடிகிறது உலகத்திலே எந்த நாட்டிலும் எந்த விடுதலைப் போராட்டத்திலும் நிகழ்த்தப்படாத அல்லது ஒப்பிட முடியாது அற்புதங்களையும் தியாகங்களையும் எமது மாவீரர்களே புரிந்துள்ளார்கள்.

எனவே எமது மாவீரர்களுக்கு அதிக உச்ச மரியாதையை தமிழர் தேசமெங்கும் வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.