உண்டியல் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகள் தொடர்பில் முக்கிய தீர்மானம்
நாட்டில் வங்கியில்லாத ஏனைய பண பரிவர்த்தனை செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதிக்கு முன்னர் உண்டியல் பரிவர்த்தனைகள் மற்றும் ஹவாலா பரிவர்த்தனைகளை பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத பரிவர்த்தனை நிறுவனங்களை சட்டவிரோத பரிவர்த்தனைகளாக அறிவிக்க நிதி அமைச்சின் நிதி புலனாய்வுப் பிரிவு முடிவு செய்துள்ளது.
பகிரங்க அறிவிப்பு
பரிவர்த்தனை செய்பவர்கள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு பகிரங்க அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எனினும் இதுவரையில் எந்த நிறுவனமும் பதிவு செய்ய விண்ணப்பிக்கவில்லை என்று நிதி அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் பதிவு செய்யப்படுவதுடன், அந்த பரிவர்த்தனைகளின் செயல்திறனை சர்வதேச அளவில் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 10 மணி நேரம் முன்
ஈரானின் வான்பரப்பிற்குள் சுட்டுவீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் போர் விமானம்! ஒரே பொய்யை கூறுவதாக மறுப்பு
குவைத் முழுவதும் உயர் எச்சரிக்கை நிலை..! பற்றியெரியும் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை - சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள்