கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மூன்று நாடுகளுடன் பேச்சுவார்த்தை - ஜனாதிபதி அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் ஜப்பானுக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
இதன்போது ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாகவும், இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, சீனா, இந்தியா உள்ளிட்ட கடன் வழங்குனர்களுடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
ரொய்ட்டர்ஸுக்கு வழங்கிய நேர்காணலில், இருதரப்பு கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க சீனா மற்றும் இந்தியா உட்பட இலங்கை கடன் பெற்றுள்ள முக்கிய நாடுகளை அழைக்குமாறு ஜப்பானைக் கோரவுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.