இடைக்கால வரவு செலவுத்திட்டம் குறித்த விவாதம் இம்மாத இறுதியில் நடைபெறும்
அரசாங்கத்தின் எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதம் இம்மாதம் இறுதியில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
ரணில் விக்ரமசிங்க பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வரவு-செலவுத்திட்டத்தை இடைநிறுத்தினார்.
அத்துடன் கடந்த மே மாதம் இரண்டு மாதங்களுக்கான குறைநிரப்புப் பிரேரணை ஒன்றையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து அனுமதி பெற்றுக் கொண்டார்.
நாடாளுமன்ற விவாதம்
இந்நிலையில் எதிர்வரும் நான்கு மாதங்களுக்கான இடைக்கால வரவு-செலவுத்திட்டம் (குறைநிரப்புப் பிரேரணை) இம்மாதம் 30ம் திகதி தொடக்கம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
அதன் பிரகாரம் இம்மாதம் 30,31ம் திகதிகளிலும் செப்டம்பர் மாதம் 1, 2ம் திகதிகளிலும் இந்த விவாதம் நடைபெறவுள்ளது.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற நிலையியல் குழுக்கள் மீதான கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இதற்குத் தலைமை தாங்கியிருந்தார். பிரதமர் தினேஷ் குணவர்த்தன குறித்த இடைக்கால வரவு - செலவுத் திட்ட உத்தேச வரைபை நிலையியல் குழுக்கள் கூட்டத்தில் முன்வைத்திருந்தார்





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
