பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம் - சாட்சியங்களில் வெளியான தகவல்

Sri Lanka Police Sri Lanka Police Investigation Ministry of Finance Sri Lanka Crime Branch Criminal Investigation Department
By Dhayani May 05, 2026 07:10 AM GMT
Report

நிதி அமைச்சகத்திலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட நான்கு அதிகாரிகளில் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க ராஜபக்‌ஷ என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் (30) திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம்! பல மாதங்களாக மறைக்கப்பட்ட டொலர் மோசடி - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம்! பல மாதங்களாக மறைக்கப்பட்ட டொலர் மோசடி - விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை

பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

நிதியமைச்சின் வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளராக செயற்பட்ட ரங்க ராஜபக்‌ஷ குளியாப்பிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டின் பின்புறப் பகுதியில், இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம் - சாட்சியங்களில் வெளியான தகவல் | Death Of Finance Ministry Official Investigation 

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட பிரேதப் பரிசோதனையில் இந்த மரணம் பலத்த வெட்டுக் காயங்களினால் ஏற்பட்ட அதிகப்படியான இரத்தப்போக்கினால் நிகழ்ந்துள்ளதாகவும், அனைத்து காயங்களும் அவரே ஏற்படுத்திக்கொண்டவை என்றும், இந்த மரணம் தற்கொலையால் ஏற்பட்டது என்றும் பிரேதப் பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்திய குழுவினர் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அவர் காயங்களை ஏற்படுத்த பயன்படுத்தப்பட்ட கத்தியானது, அவரது வீட்டில் பயன்படுத்தப்பட்ட ஒன்று என்றும், அதில் இரத்தக்கறை படிந்திருந்தது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் நடத்திய விசாரணை

இவ்விடயம் தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில் கிடைத்த சாட்சியங்களின்படி,

நிதி மோசடி காரணமாக அவரது பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாலும், குற்றப்புலனாய்வுத்துறையால் பல நாட்கள் நடத்தப்பட்ட விசாரணைகளாலும் அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிதியமைச்சு அதிகாரியின் திடீர் மரணம் - சாட்சியங்களில் வெளியான தகவல் | Death Of Finance Ministry Official Investigation

மறைந்த ரங்க நிஷாந்த ராஜபக்ஷ இரண்டு மகள்களின் தந்தை ஆவார். மூத்த மகள் பல்கலைக்கழகத்திலும், பதினைந்து வயதான இரண்டாவது மகள் பாடசாலையிலும் படித்து வருகின்றனர். அவரது மனைவி பாடசாலை ஆசிரியை ஆவார்.

மேலும், இந்த சம்பவத்தின் மூலம் தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் சமுதாயத்தின் முன் தான் சந்திக்க நேரிடும் அவமானத்தைப் பற்றி அவர் இறப்பதற்கு முன்பு மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்தார் என்பது தெரியவந்துள்ளது.

மரணம் தொடர்பாக குடும்ப உறுப்பினர்களாலும், பிரேதப் பரிசோதனையின்போது அவரது மனைவியும் மகளும் அளித்த சாட்சியங்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.       

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்...! திமுக கோட்டையை தகர்க்க த.வெ.க. வகுத்த 6 கட்ட வியூகம்

பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்...! திமுக கோட்டையை தகர்க்க த.வெ.க. வகுத்த 6 கட்ட வியூகம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து - 13 பேர் வைத்தியசாலையில்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற வான் விபத்து - 13 பேர் வைத்தியசாலையில்

மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US