கொவிட் தொற்றில் குணமடைந்து வீடு திரும்பிய பெண் மரணம்
தென்னிலங்கையில் கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண்ணொருவர் அடுத்த நாள் உயிரிழந்துள்ளார்.
அக்மீமன பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான திருமணமாகத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொவிட் தொற்றுக்குள்ளாகி 16 நாட்கள் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண் மறுநாள் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், கொவிட் தொற்றியமையினால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பெண் அதிக இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த பெண் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam