முக்கிய பிரமுகர்களின் சொத்து பிரகடனங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு அறிவிப்பு
முக்கிய பிரமுகர்களின் சொத்து பிரகடனங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நடவடிக்கை, அண்மையில் இயற்றப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் சட்டத்தின்படி எடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கை
புதிய சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ், ஜனாதிபதி, பிரதமர்,அரசியல்வாதிகள், அரச ஊழியர்கள் மற்றும் ஊடகத் தலைவர்கள் அடங்கிய சுமார் 150,000 பேர், வருடாந்தம் விரிவான சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த உத்தரவின் நோக்கம் முப்பத்தொரு வெவ்வேறு துறைகளில் உள்ள தனி ஆட்களுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டாய வெளிப்பாட்டிற்கு இணங்குவதற்கான காலக்கெடு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆக இருக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri