வவுனியாவில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலமானது நேற்றைய தினம் (31.05.2023) இரவு மீட்கப்பட்டுள்ளது.
தாண்டிக்குளம் - ஒயார்சின்னக்குளம் பகுதியில் வசித்து வந்த 58 வயதுடைய பாலசிங்கம் சுரேஸ் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தடயவியல் பொலிஸார் விசாரணை
குறித்த குடும்பஸ்தர் நேற்றையதினம் (31.05.2023) இரவு உணவருந்திவிட்டு நித்திரைக்கு சென்று தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
இரவு தூக்கத்தில் இருந்து கண் விழித்த மனைவி கணவனை நீண்ட நேரம் காணாததால் வீட்டிற்கு வெளியே சென்று பார்த்த போது வீட்டின் முன்புறமாகவுள்ள வேம்பு மரத்தில் தூக்கில் தொங்குவதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து அயல் வீட்டாரின் உதவியுடன் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம சேவையாளர் மற்றும் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தடயவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri
