குவிந்து கிடக்கும் சடலங்கள்! உடனடி நடவடிக்கைக்கு அமைச்சர் உத்தரவு - செய்திகளின் தொகுப்பு
அரச வைத்தியசாலைகளில் குவிந்து கிடக்கும் அடையாளம் தெரியாத சடலங்களால் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளவதாக சுாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த சடலங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சுக்கும், பொலிஸாருக்கும் பணிப்புரை விடுப்பதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சுகாதார பணிப்பாளர் தலைமையிலான சுகாதார தரப்பினருக்கும், நீதி அமைச்சருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற நிலையில் இந்த விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
இனந்தெரியாத சடலங்களை அகற்ற முடியாததன் காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைகள் மற்றும் சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திகளின் தொகுப்பு,