மட்டக்களப்பு பிரபல பெண்கள் பாடசாலை மாணவியுடன் சர்ச்சையில் சிக்கிய பிள்ளையானின் சகா!
மட்டக்களப்பு மாவட்ட ஒரு சில மக்கள் இணைந்து அமைச்சர்கள், அமைச்சுப்பதவிகள் வேண்டும் என்று சொல்லி உருவாக்கி விட்டார்கள் ஆனால் அதுவே இன்று எமது மாவட்டத்திற்கான சாபக்கேடாக மாறிவிட்டது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனருத்தாணம் செய்யப்படும் கிரான் ஆதி வைரவர் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்கு நேற்று (2) மாலை வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா,சாணக்கியன் ஆலய வெளி முன்றலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான குடி நீர் திட்டத்தை நான் கொண்டு வந்தபோது அதை அம்பாறை மாவட்டத்திற்கு மாற்றி விட்டார்கள்.இவ்வாறு பல விடயங்களை அவர்கள் தடுக்கிறார்கள்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாதவனை பிரச்சினைக்கு கூட இன்னும் தீர்வு எட்டப்படாமல் உள்ளது.
இது இவ்வாறிருக்க தமிழ் மக்களாகிய நாம் அனைவரும் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலே சரியான ஒருவரை தேர்ந்து வாக்களித்து எமது அரசியல் பிரச்சினைக்கான தீர்வுகளை பெற முயற்சிக்க வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
12 மாதங்களின் பின் கும்பத்தில் உருவாகும் சுக்ராதித்ய ராஜயோகம்: டபுள் ஜாக்பாட் இந்த 3 ராசிக்கு தான்! Manithan
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினிக்கு திருமணம் முடிந்தது... மாப்பிள்ளை யார் தெரியுமா? ஜோடியின் புகைப்படம் இதோ Cineulagam
தேவசகாயமிடம் இருந்து தப்பித்த ஜனனி, மதிவதனி.. ஆடிப்போய் இருக்கும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் 2 புரோமோ வீடியோ Cineulagam
போர் நடந்தால் டிரம்பிற்கு இது பாடமாக இருக்கும்! அமெரிக்காவுக்கு ஈரான் தளபதி எச்சரிக்கை News Lankasri