இரும்பு கம்பியால் பாட்டியை தாக்கி கொன்ற சிறுவன்: வெளியான காரணம் (Video)
நாடளாவிய ரீதியில் பல்வேறு குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இதனால் பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் இரும்பு கம்பியால் தாக்கியதில் 81 வயது பாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹெம்மாதகம, தல்கஸ்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், திருகோணமலை தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேதீஸ்புர பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரி பிரதேசத்தில் 7 வயது சிறுமியை கொன்று காட்டில் இரகசியமான முறையில் புதைக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
வவுனியாவில் தனியார் கல்வி நிலையத்தில் ஆசிரியர் ஒருவரைத் தாக்க முற்பட்ட மாணவர்களினால் ஆசிரியருக்கு அருகில் நின்ற மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனால் தலையில் காயமடைந்த குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு இலங்கையில் நாட்டில் இடம்பெற்ற, குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள், நீதிமன்ற உத்தரவுகள் தொடர்பிலான முழுமையான தகவல்களை தொகுத்து வழங்குகின்றது எமது குற்றப் பார்வை நிகழ்ச்சி,