பிரேசிலில் மீண்டும் அச்சுறுத்தலாக மாறிவரும் கோவிட் பரவல்!
உலக நாடுகளில் பிரேசிலில் கோவிட் மீண்டும் உக்கிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன்,நேற்று மாத்திரம் 98,135 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் 24 மணி நேரத்தில் 2,449 பேர் மரணம் அடைந்துள்ளதுடன்,உலக நாடுகளில் மொத்த கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 17.8 கோடியை தாண்டியுள்ளதுடன்,உலகின் மொத்த கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 17,85,86,111 ஆக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளின் கோவிட் மரணங்கள் எண்ணிக்கை 38,66,636 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் கோவிட் தொற்றின் பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 16,31,03,201 ஆகவும் அதிகரித்துள்ளது.
பிரேசிலில்தான் தற்போது கோவிட் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அங்கு ஒரே நாளில் 98,135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்,நேற்று மட்டும் 2,449 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கோவிட் பாதிப்பு சற்று குறைய தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 60,800 பேருக்கு உறுதி செய்யப்பட்டது.
இந்தியாவில் நாள் ஒன்றிற்கான கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 1,269 ஆகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.