தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நான்கு நாட்களாக ஸ்தம்பிதம்
கோவிட் நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் கடந்த நான்கு நாட்களாக ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 11ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரையில் கோவிட் தடுப்பூசி எவருக்கும் ஏற்றப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி இறுதியாக 66 பேருக்கு கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
தொற்று நோய்ப் பிரிவினால் வெளியிடப்படும் ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரையில் 925242 இலங்கையர்களுக்கும், 2469 சீனப் பிரஜைகளுக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசி பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட தாமத நிலைமைகளினால் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam